Skip to main content
image  குறை நிவர்த்தி : + 044-4567 4567 (24x7)
TN Logo CM Photo
Minister Photo CMWSSB Logo

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

.
 

எதிர்ச் சவ்வூடுபரவல் ஆலை

1. மீனவ காலனிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு குடிநீர் மற்றும் சமையல் தேவைகளுக்கு நல்ல தரமான தண்ணீரை வழங்க சென்னை குடிநீர் வாரியம் ஒரு பரிசீலனை முடிவை எடுத்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் கடலுக்கு அருகாமையிலும், நகர குடிநீர் விநியோக முறையின் இறுதிப் பகுதியிலும் வசிப்பதால் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர், இதனால் பெரும் உடல் நலப்பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எதிர்மறை சவ்வூடு பரவல் செயல் முறை மூலம் உள்நாட்டில் கிடைக்கும் உவர் நிலத்தடிநீரை சுத்திகரித்து குடிநீரை வழங்குவதன் மூலம் இந்த மக்களுக்கு உதவ, எதிர்மறை சவ்வூடு பரவல் ஆலைகளின் பயன்பாட்டை கண்டுபிடிப்பதற்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

2. மூன்று எதிர்மறை சவ்வூடு பரவல் ஆலைகள் ஒன்று வேளச்சேரியில் (4.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு), மற்றவை நொச்சிக்குப்பம் (1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு) மற்றும் காசிமேடு (1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு) ஆகிய இடங்களில் உள்ளன.

3. 2001 ஆம் ஆண்டு வறட்சியின் போது, இரண்டு புதிய எதிர்மறை சவ்வூடு பரவல் ஆலைகள் ஒன்று அயோத்திக்குப்பம் (1.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு) மற்றொன்று காசிமேடுகுப்பம் (இராயபுரம்) ஆகியவற்றில் நிறுவப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் சுமார் 5000 மக்களுக்கு சேவை செய்கின்றன.

எதிர்மறை சவ்வூடு பரவல் ஆலைகள் திறந்த கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகளைக் கொண்டுள்ளது, இதன் வழியாக எதிர்மறை சவ்வூடு பரவல் ஆலைக்கு தேவையான உவர்நீர் எடுக்கப்படுகிறது. கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சாநீர் சேமிப்பு தொட்டிகளில் சேமிக்கப்பட்டு, குவார்ட்ஸ் மணல் மற்றும் ஆந்த்ராசைட் ஆகியவற்றைக் கொண்ட இரட்டை ஊடக வடிகட்டிகளுக்கு பம்ப் செய்யப்படுகிறது, அதில் மிதக்கும் துகள்கள் அகற்றப்படுகின்றன. மைக்ரான் அளவு துகள்களை அகற்ற இரட்டை மீடியா வடிகட்டியில் இருந்து வடிகட்டிய நீர்மைக்ரான் வடிகட்டியில் செலுத்தப்படுகிறது, பின்னர் உயர் அழுத்த பம்புகள் மூலம் எதிர்மறை சவ்வூடு பரவல் செயல் முறை அலகுக்குள் செலுத்தப்படுகிறது.

எதிர்மறை சவ்வூடு பரவல் செயல் முறை தொகுதியில் மிக மெல்லிய படலம் கொண்ட பாலியமைடு சவ்வு இருக்கிறது. இந்த சவ்வு வழியாக உவர் நீரை அதிக அழுத்தத்துடன் செலுத்தும்போது, கரைந்துள்ள திடப்பொருள்கள் அகற்றப்பட்டு, 500 ppm –க்கும் குறைவான கரைந்ததிடப் பொருள் அளவுடன் உற்பத்தியாகும் குடிநீர் குடிப்பதற்குத் தகுதியானது ஆகும். எதிர்மறை சவ்வூடு பரவல் தொகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் அதிக உப்பு அளவுகள் கொண்ட தண்ணீர் அருகிலுள்ள கழிவுநீர் அமைப்பு வழியாக அப்புறப்படுத்தப் படுகின்றன, ஏனெனில் வெளியேற்றப்படும் தண்ணீரின் தரம் வீட்டு பயன்பாட்டு கழிவுநீர் அமைப்பு வழியாக அப்புறப்படுத்த அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் உள்ளது.

முடித்த சவ்வூடு பரவல் ஆலை (உள்காட்சி)

முடித்த சவ்வூடு பரவல். ஆலை (வெளிப்புறக்காட்சி)

அயோத்திகுப்பத்தில் சவ்வூடு பரவல் ஆலை